நானும் இந்தச் செடியும் படும் பாடு

இண்ணைக்கு காலையில நாங்கெல்லாம் காலைச் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தப்போ அம்மா ஆஆஆ பூ பூத்திருச்சு அப்படியெண்டு சொன்னாங்க. நா மேசையில ஏறிப் பாத்தேன், வெள்ளையா ஒரு குட்டிப் பூ இருந்துச்சு. அப்பாடா, ரெண்டு வருசத்துல இப்பதான் பூத்திருக்கு எண்டு அம்மா சொன்னாங்க. தொட்டுப் பாக்கலாமா எண்டு கேட்டேன். இல்ல முதல்ல கீழ இறங்குங்க எண்டு சொல்லிற்றாங்க!