மழலைச் சொல்

Saturday, March 25, 2006

சனி ஞாயிறு


நா தூங்கி எழுந்து வந்தென். அப்பா குளிக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சு. உள்ள போனென். "அப்பா நீங்க இண்டைக்கி வேலைக்குப் போவேண்டாம்," எண்டு சொன்னென். அப்பா தண்ணிய நிறுத்திட்டு, திரையை விலக்கிட்டு, கீழ உக்காந்து, "ஏன் குட்டி?" அப்படிண்டு கேட்டாங்க. நா சொன்னென், "ஏன்னா நீங்க எனக்கு ரொம்ப விருப்பம்." அதுக்கு அப்பா ஒரு மாதிரி சிரிச்சுட்டு "இண்டக்கிப் போகணும் குட்டி, ஆனா சனிக் கிழமையும், ஞாயித்துக் கிழமையும் வீட்லயே இருப்பென், சரியா?" எண்டு கேட்டாங்க. நான், "சரி அப்பா, சனிக் கிழமையும், ஞாயித்துக் கிழமையும் வீட்ல இருப்பீங்க, சரி," அப்படின்னு சொல்லிட்டு மறுபடியும் போய்ப் படுத்துக் கொண்டென்.

1 Comments:

Anonymous Anonymous said...

சனிக்கிழமையும், ஞாயிற்று கிழமையும் அப்பா வீட்டில் இருந்தாரா குட்டி?

-பொன்னார்மேனியன்

9:06 AM  

Post a Comment

<< Home