மழலைச் சொல்

Sunday, December 16, 2007

நம்பளோட பள்ளிக்கூடம்


இதான் நம்பளோட பள்ளிக்கூடம். எனக்கு அங்க இருக்கது விருப்பம். நம்பளோட 24 பிள்ளைங்கள் இருக்காங்க நம்மளோட வகுப்புல. 899 பிள்ளைங்க நம்பளோட பள்ளிக்கூடத்துல இருக்காங்க. நம்மளுக்கு கிண்டர்கார்டன் இருக்கு, அப்புறம் நடுநிலைப்பள்ளி இருக்கு. அதுக்கப்புறம் நிறைய பிள்ளைங்க இருக்காங்க. நோவா, கேலப், எல்லாப் பிள்ளைங்களும் என்னோட நண்பர்கள். ஆனா ஈதன் மட்டும் இல்ல. ஏன்னா ஈதன் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அப்படின்னு செய்வாங்க. அதுக்குத்தான் அவங்க எனக்கு விருப்பம் இல்ல. முதல்நாள் பள்ளிக்கூடத்துக்கு வர்றது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. முதல் நாள் அம்மா அப்பா வந்தாங்க என்னை விடுறதுக்கு. எனக்கு நிறைய பென்னி (penny) கிடைக்கும். நா பள்ளிக்கூடத்துல நல்ல பையனா இருக்கேன்!! அதுக்குத்தான் பென்னி கிடைக்கும். நா ரொம்ப தெம்பு. நா வந்து விளாடுவேன். நா வந்து சாக்கர் விளாடுவேன்! நோவா, நா, டிலன், லியம் நிறைய பேர் விளாடுவோம்!& ஷார்க் அட்டாக் (சுறா தாக்கு) விளாடுவோம். நான், லூயிஸ், ஜேக்கப் எல்லாரும் தண்ணிக்குள்ள இருப்போம். நம்ம சுறாவா மாறுவோம். நம்ம லூயிஸைத் தாக்க வருவோம். அவர்தான் ஆள். நம்ம வந்து பைரட்ஸ் விளாடுவோம். அது ரொம்ப விருப்பம் இல்லை xxxx @@ அது எனக்கு விருப்பமேஏஏஏஏஏஏஏ இல்ல. பள்ளிக்கூடத்துல சாப்பாடு நல்லாருக்கும். ஆனா சிலது கொழுப்பு. அதை மட்டும் சாப்பிட்டுறாதீங்க!

Saturday, December 15, 2007

இஞ்சி ரொட்டி வீடு

ஒரு நாள் ஒரு இஞ்சி ரொட்டி வீட்டை (ginger bread house) நம்மளோட பள்ளிக்கூடத்துல செஞ்சோம். சந்தோஷமா இருந்துச்சு. சில அம்மாக்கள் வந்தாங்க, உதவி செய்றதுக்கு. நம்மளோட ஆசிரியரும் அங்க இருந்தாங்க. ரெண்டு ஆசிரியர்கள் இருந்தாங்க.
ஒரு தட்டை எடுத்தோம். அது பனி மாதிரி வெள்ளையா இருந்துச்சு.
ஒரு பால் பெட்டிய எடுத்தோம். சூடான பசையால தட்டோட சேத்து ஒட்டுனோம். அந்த ஐசிங் எனக்குக் கையில பிடிச்சிருச்சு.

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆன்னு கையை உதறினேன். "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ காம் டவுன் தம்பி" அப்படின்னு ஆசிரியர் சொன்னாங்க. ரொட்டியோட ஒட்டினேன். ஆனா அதை ஆசிரியர்தான் செஞ்சாங்க. நோ ஃபேர்!!!!!! (No fair!). ஆனா நம்ம செஞ்சா சுட்டுரும். அதனாலதான் ஆசிரியர் செஞ்சாங்க. அப்புறம் முட்டாய் எல்லாம் நாங்க வச்சோம். அதை சாப்பிடலை. ஏன்னா அதுல ஔ.....பசை இருக்கு. அது சாப்பிடக் கூடாத பசை. அப்புறம் அதை வீட்டுக்குக் கொண்டு வந்துட்டேன். நா பள்ளிப் பேருந்துல வந்தேன். யாரோ என்னோட வீட்டைப் பாத்து "வாவ், நீங்க செஞ்சீங்களா?"ன்னு கேட்டாங்க. நா "ஆமா, நன்றி"ன்னு சொன்னேன்.