மழலைச் சொல்

Saturday, October 25, 2008

பாலைவனத்துல நான்

இண்டக்கி இரவு நா கனவு கண்டேன். அந்தக் கனவு ரொம்ப ரொம்ப கூடாத கனவு. அந்தக் கனவு எதப் பத்தின்னா, ஒரு எலும்புக்கூடு என்னைத் துரத்துது. அது ஒரு பாலைவனம். பின்னாடியே ஓடி வருது. நா வந்து ரொம்ப வேகமா ஓடுறேன். ஒரு பிரமிடுக்குள்ள ஓடுறேன். நா இன்னும் வேகமா ஓடுறதுக்கு மூணு குட்டிக்கரணம் போட்டேன். ஓ நோ! நா மறிபட்டுட்டேன். அதுக்கப்புறம், நா வந்து பவர் ரேஞ்சரோட லீடரா உருமாறிட்டேன். அதுக்கப்புறம், நா வந்து எலும்புக் கூட்டைப் பாத்தேன். அதுக்கப்புறம்...அதுக்குப் புக்குமணியில ஒரு குத்து விட்டேன். இப்ப அந்த எலும்புக் கூட்டுக்கு லீடர் யாரு? நாந்தான். அதுக்கப்புறம், நா வந்து ஒரு குட்டிக் கரணம் போட்டு அந்த எலும்புக் கூட்டை தூத்துமணியில ஒரு உதை விட்டேன். தி எண்ட். 

Saturday, August 23, 2008

டைடானிக் கதையின் நீதி

ராத்திரி தூங்கப் போகும்போது நா அப்பாவுக்கு ஒரு கதை சொன்னேன். அது டைடானிக் கதை. ஒரு கப்பல் செஞ்சாங்க. அதுக்கு 11 மாடி இருந்துச்சு. உள்ளே விளையாட்டு எல்லாம் இருந்துச்சு. இது மாதிரி கப்பலை யாரும் பாத்ததே இல்லன்னு சொன்னாங்க. ஒரு மிதக்குற நகரம்னு அந்தக் கப்பலைச் சொன்னாங்க. அது இங்கிலாந்துல இருந்து அமெரிக்காவுக்கு வந்துச்சு. அதுல நிறைய ஆக்கள் ஏறினாங்க. கப்பல் போகும்போது அதொட கேப்டன் ஒரு பெரிய பனிப்பாறையைப் பாத்தார். அப்போ அந்தக் கப்பலைத் திருப்பப் பாத்தார் ஆனா, திருப்ப முடியலை. கப்பல் அதுல போயி உரசிடிச்சு. கப்பல்ல இப்படி (கைகளைக் கோர்த்து வளைத்துக் காட்டி) ஒரு ஓட்டை வந்திடிச்சு. அதுக்குள்ள தண்ணி வந்திடிச்சு. கப்பல் இப்படி ஆடுது. இப்படி ஆடுது. அப்பறம் இப்படி இப்படி முழுகுது. அப்ப நிறைய ஆக்கள் கடலுக்குள்ள குதிச்சிட்டாங்க. லைப் போட்ல கொஞ்சம் பேரு ஏறிட்டாங்க. அடுத்த நாள் காலையில வரைக்கும் காப்பாத்த யாரும் வரலை. அப்புறமா ஒரு கப்பல் வந்திச்சு. அதுக்கு எல்லாரும் தீக்குச்சியைக் கொழுத்தி, பேப்பரை எரிச்சுக் காட்டுறாங்க. அந்தக் கப்பல் வந்து எல்லாரையும் காப்பாத்திடிச்சு.

கதை முடிஞ்சதும் அப்பா சொன்னாங்க, "ச்ச, ரொம்ப வருத்தமா இருக்கு, இல்ல?" நா சொன்னேன், "கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் மகிழ்ச்சி." அப்பா கேட்டாங்க, "ஏன் மகிழ்ச்சி?" அதுக்கு நா சொன்னேன், "வருத்தம் ஏன்னா அந்தக் கப்பல் மூழ்கிடிச்சு. மகிழ்ச்சி ஏன்னா காலையில இன்னொரு கப்பல் வந்து நிறைய ஆக்களைக் காப்பாத்திடுச்சில்ல, அதுக்கு."

இன்னக்கி எனக்கு நல்ல கனவா வரும்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டேன்.

இன்பம் துன்பம் எல்லாம் நம்ம பார்க்கிற விதத்திலதான் இருக்குன்னு அப்பாவுக்கு விளங்கியிருக்கும்!

Sunday, August 10, 2008

அதோ அந்தப் பறவை போல!


நானும் அப்பாவும் எங்களோட ரகசிய இடத்துக்குப் போனோம். அங்க சைக்கிள்லதான் போகணும். அங்க நிறைய மரங்கள், ஒரு ஏரி எல்லாம் இருக்கும். வெயில் அடிச்சிச்சா, அதனால நாங்க ஒரு மரத்துக்குக் கீழ நின்னோம். அப்ப நாங்க பேசிக்கிட்டோம்:

நா: இந்த ஏரியில குளிக்க முடிஞ்சா நல்லா இருக்கும்.
அப்பா: இங்க நீங்க ஆத்துல, ஏரியில குளிக்க முடியாது. ஏன்னா சில நேரம் முதலைகள் இருக்கும். ஆனா இந்தியாவுல, ஈழத்துல நீங்க குளிக்கலாம்.
நா: ஆனா ஈழத்துக்கு நம்ம போக முடியாதே.
அப்பா: ஆமா இப்ப சண்டை நடக்குது. அங்க கூடாத ஆமி நிக்கிது. குண்டெல்லாம் போடுவாங்க. அதனால போமுடியாது.
நா: சண்டை எப்ப முடியும்?
அப்பா: தெரியாது குஞ்சு. புலிகள் எல்லாம் அந்த கூடாத ராணுவத்தை விரட்டின பிறகுதான் அங்க இருக்கவங்க எல்லாம் நிம்மதியா இருக்கலாம். குளத்தில போயி குளிக்கலாம்.
நா: எனக்கு அந்த கூடாத ஆமி மேல விருப்பம் இல்ல. குண்டு போடுறது விருப்பம் இல்ல.
அப்பா: எல்லாருக்கும் அதுதான் குஞ்சு வேணும். உலகத்துல சண்டை இல்லாம, வெடி குண்டு இல்லாம, எல்லாரும் அன்பா இருக்கணும்.
நா: நா பெரிய பிள்ளையா வந்த பிறகு ஒரு recycle ஆளா மாறி, எல்லா fighter jets, வெடிகுண்டு எல்லாத்தையும் உருக்கிடுவேன்.
அப்பா: குஞ்சு, அதுக்கு நீங்க recycle ஆளா வரக்கூடாது. ஒரு பெரிய political scientist அல்லது
நா: ஒரு கவர்னர் அப்படி.
அப்பா: ஆமா, ஒரு பெரிய அதிகாரம் இருக்கணும் அப்பதான் 'நமக்கு இந்த துப்பாக்கி, குண்டு எல்லாம் வேண்டாம், அமைதியா இருப்போம்னு சொல்லி எல்லாத்தையும் தூக்கிப் போடலாம்.
நா: ஆமா, ஆமா. நா சொல்லுவேன், we do not want fighter jets, we dont want bombers, no more guns, thank you.
அப்பா: நல்லது குஞ்சு. அதுக்குத்தான் நான் சொல்லுவேன் நீங்க துப்பாக்கி விளையாட்டு விளையாடக் கூடாதுன்னு.
நா: சரி அப்பா, நா இப்ப மூணு வார்த்தை சொல்றேன், I Dont Like Guns. Actually அப்பா, அது நாலு வார்த்தை.

அப்புறமா நாங்க வீட்டுக்கு வந்துட்டோம். வீட்டுல விளாடும்போது நா "ஒரே வானிலே, ஒரே வானிலே" அப்படின்னு பாடினேன். எங்க கேட்டிங்க இந்தப் பாட்டைன்னு எல்லாம் கேட்டாங்க. நா ஒரு பஸ்சில் அந்தப் பாட்டைக் கேட்டேன். நீங்களும் கேளுங்க!

Sunday, December 16, 2007

நம்பளோட பள்ளிக்கூடம்


இதான் நம்பளோட பள்ளிக்கூடம். எனக்கு அங்க இருக்கது விருப்பம். நம்பளோட 24 பிள்ளைங்கள் இருக்காங்க நம்மளோட வகுப்புல. 899 பிள்ளைங்க நம்பளோட பள்ளிக்கூடத்துல இருக்காங்க. நம்மளுக்கு கிண்டர்கார்டன் இருக்கு, அப்புறம் நடுநிலைப்பள்ளி இருக்கு. அதுக்கப்புறம் நிறைய பிள்ளைங்க இருக்காங்க. நோவா, கேலப், எல்லாப் பிள்ளைங்களும் என்னோட நண்பர்கள். ஆனா ஈதன் மட்டும் இல்ல. ஏன்னா ஈதன் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அப்படின்னு செய்வாங்க. அதுக்குத்தான் அவங்க எனக்கு விருப்பம் இல்ல. முதல்நாள் பள்ளிக்கூடத்துக்கு வர்றது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. முதல் நாள் அம்மா அப்பா வந்தாங்க என்னை விடுறதுக்கு. எனக்கு நிறைய பென்னி (penny) கிடைக்கும். நா பள்ளிக்கூடத்துல நல்ல பையனா இருக்கேன்!! அதுக்குத்தான் பென்னி கிடைக்கும். நா ரொம்ப தெம்பு. நா வந்து விளாடுவேன். நா வந்து சாக்கர் விளாடுவேன்! நோவா, நா, டிலன், லியம் நிறைய பேர் விளாடுவோம்!& ஷார்க் அட்டாக் (சுறா தாக்கு) விளாடுவோம். நான், லூயிஸ், ஜேக்கப் எல்லாரும் தண்ணிக்குள்ள இருப்போம். நம்ம சுறாவா மாறுவோம். நம்ம லூயிஸைத் தாக்க வருவோம். அவர்தான் ஆள். நம்ம வந்து பைரட்ஸ் விளாடுவோம். அது ரொம்ப விருப்பம் இல்லை xxxx @@ அது எனக்கு விருப்பமேஏஏஏஏஏஏஏ இல்ல. பள்ளிக்கூடத்துல சாப்பாடு நல்லாருக்கும். ஆனா சிலது கொழுப்பு. அதை மட்டும் சாப்பிட்டுறாதீங்க!

Saturday, December 15, 2007

இஞ்சி ரொட்டி வீடு

ஒரு நாள் ஒரு இஞ்சி ரொட்டி வீட்டை (ginger bread house) நம்மளோட பள்ளிக்கூடத்துல செஞ்சோம். சந்தோஷமா இருந்துச்சு. சில அம்மாக்கள் வந்தாங்க, உதவி செய்றதுக்கு. நம்மளோட ஆசிரியரும் அங்க இருந்தாங்க. ரெண்டு ஆசிரியர்கள் இருந்தாங்க.
ஒரு தட்டை எடுத்தோம். அது பனி மாதிரி வெள்ளையா இருந்துச்சு.
ஒரு பால் பெட்டிய எடுத்தோம். சூடான பசையால தட்டோட சேத்து ஒட்டுனோம். அந்த ஐசிங் எனக்குக் கையில பிடிச்சிருச்சு.

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆன்னு கையை உதறினேன். "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ காம் டவுன் தம்பி" அப்படின்னு ஆசிரியர் சொன்னாங்க. ரொட்டியோட ஒட்டினேன். ஆனா அதை ஆசிரியர்தான் செஞ்சாங்க. நோ ஃபேர்!!!!!! (No fair!). ஆனா நம்ம செஞ்சா சுட்டுரும். அதனாலதான் ஆசிரியர் செஞ்சாங்க. அப்புறம் முட்டாய் எல்லாம் நாங்க வச்சோம். அதை சாப்பிடலை. ஏன்னா அதுல ஔ.....பசை இருக்கு. அது சாப்பிடக் கூடாத பசை. அப்புறம் அதை வீட்டுக்குக் கொண்டு வந்துட்டேன். நா பள்ளிப் பேருந்துல வந்தேன். யாரோ என்னோட வீட்டைப் பாத்து "வாவ், நீங்க செஞ்சீங்களா?"ன்னு கேட்டாங்க. நா "ஆமா, நன்றி"ன்னு சொன்னேன்.

Monday, November 12, 2007

செல்கள்


என்னோட அப்பா புடிக்கும். என்னோட அப்பா எனக்கு ரொம்ப புடிக்கும். என்னோட அப்பா நல்லா சாக்கர் விளாடுவாங்க. அவங்க சாக்கர்ல வந்து ரொம்ப நல்லா இருக்காங்க. என்னோட அப்பா, நல்லா போவாங்க. அப்பா வந்து, நிறைய நுண்ணோக்கில கண்டுபிடிப்பாங்க. ஒரு நுண்ணோக்கி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கண்ணுக்குத் தெரியாத செல்ஸ்ஐ வந்து பாக்க வைக்கும். சில செல்ஸ் நல்லது. வெள்ளை செல்கள் நல்லது. சிவப்பு செல்கள் நல்லது. சில சிவப்பு செல்கள் காதுக்குள்ள இருக்கும். அது ரொம்ப கூடாதது. அது வலிக்கும். எனக்கு ஒன்னு இருந்துச்சு. நா வந்து, பள்ளிக்கூடத்துல இருக்க டாக்டர் ஆபிசுக்குப் போனேன். ஊசியெல்லாம் போடலை. லை லை லை லை. நல்லா இருந்தாங்க அந்த நர்ஸ். எனக்கு விருப்பம் அந்த நர்ஸ். அந்த நர்ஸ் எனக்கிட்ட நல்லா பார்த்தாங்க, காதுக்குள்ள. கொஞ்சம் இளஞ்சிவப்பு இருந்துச்சு. என்னோட சிவப்பு செல் கீழ கீழ கீழ கீழ வக்கிது. அது ரொம்ப வலியா இருந்துச்சுன்னா செல் வந்து ரொம்ப சிவப்பா இருக்கும். அந்த சிவப்பு செல் கூடாதது. சில சிவப்பு செல் நல்லது. வெள்ளை செல் கூடாத பச்சை பாக்டீரியா எல்லாம் வந்து எடுத்துரும்.

Sunday, November 11, 2007

எனக்கு அழுகை வருது


நான் அழுகிறென். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விளங்கலெ. ஏன் அழுகிறேனெண்டு என்னால சொல்ல முடியாது. முதுகில கடிக்கிறது (அரிக்கிறது), பலூன் உடையுறது, இருட்டு எல்லாத்தையும் பார்த்து அழுகிறென். இந்த ஊரு நண்பர்களும், பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும்தான் கத்துக் கொடுத்தாங்க, தங்கச்சி அழுகிறப்ப அம்மாவும் அப்பாவும் தூக்குறாங்க, அதனாலதான் நான் அழுது அவங்கட கவனத்தை வேண்டுறேன் எண்டு அம்மாவும், அப்பாவும் பேசிக் கொள்கிறாங்க. சில நேரம் விளையாட்டுக் காட்டுறாங்க. சில நேரம் பேசிப் பேசிச் சொல்லுறாங்க. சில நேரம் கண்டிப்பா சொல்லுறாங்க. நானும் சில நேரம் கேப்பென், சில நேரம் கேட்க மாட்டென். அழுகிறது எனக்குப் பிடிக்கலைதான். ஆனாலும் சில நேரம் நான் அழுகிறென். படத்தில அழுகிறது நான் இல்ல!