மழலைச் சொல்

Friday, August 11, 2006

1:20க்குத்தான் போவணும்


அப்பா மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தாங்க. நாங்க எல்லாரும் சாப்பிடும்போது, "அப்பா நீங்க எப்ப போவீங்க?"ன்னு கேட்டென்.
"1:20க்கு"ன்னு அப்பா சொன்னாங்க.
நா மைக்ரோவேவை திரும்பிப் பாத்தென். ஏன்னா அதுலதான மணி தெரியும்.
அப்பா சொன்னாங்க, "அதில 1 போட்டு ரெண்டு புள்ளி வச்சு 2க்கு அப்புறம் 0 வருமே அப்ப."
நா 1:20 வந்திடுச்சான்னு பாத்துக்கொண்டே இருந்தென். நாங்க சாப்பிட்டு முடிச்சிட்டு முன்னுக்குப் போயிட்டம். அப்புறமா நா வந்து மணியப் பாத்துப்போட்டு அப்பாட்ட சொன்னென்,
"இப்பதான் 1 போட்டு ரெண்டு ரெண்டு போட்டிருக்கு, இன்னும் 1:20 வரல."
அப்பா சொன்னாங்க "இல்ல குட்டி அப்படின்னா 1:20 ஏற்கனவே வந்துட்டுப் போயிடுச்சு."
நா சொன்னென், "இல்லப்பா நீங்க போக்கூடாது, 1:20 வந்த பிறகுதா போவணும்."

12 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

//நா சொன்னென், "இல்லப்பா நீங்க போக்கூடாது, 1:20 வந்த பிறகுதா போவணும்."
//

சரிதான், 1/2 நாள் அப்பா லீவு போட வேண்டியதுதான்.

:)

1:44 PM  
Blogger மழலை said...

@சரிதான், 1/2 நாள் அப்பா லீவு போட வேண்டியதுதான்.@

இல்லை சிபி அண்ணா, அப்பா இப்பிடி இப்பிடி அமுக்கினாங்களா 1:20 வந்துச்சு அப்புறம் போயிற்றாங்க.

1:47 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

அறிவாளிப் பிள்ளை.. அறிவாளி அப்பா..

சரி, அதென்ன புதுசா புகை விடுது தவளை?

1:48 PM  
Blogger Santhosh said...

ஆகா இப்ப அடம்பிடிக்கவும் ஆரம்பிச்சிடியா :))

1:50 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//அப்பா இப்பிடி இப்பிடி அமுக்கினாங்களா 1:20 வந்துச்சு //

எப்படின்னு கேட்டு கத்து வெச்சிக்குங்க!
இன்னொரு நாள் பயன்படும்.

12.30 மணிக்கு டி.வி பார்க்கலாமில்ல.

1:54 PM  
Blogger VSK said...

ஆஹா! சிபியாரையே கவுத்திட்டீங்களே, மழலை!

இது எதிர்க்கட்சி சதிதானே!!

1:54 PM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

தம்பீ, மணி பாக்குறதுக்கு கடிகாரமே இல்லைன்ன அப்பா வேலைக்கே போக வேண்டியதில்லை உனக்கு ஒரே குஷியா இருக்குமில்லே ;-)))

1:57 PM  
Blogger மழலை said...

@அதென்ன புதுசா புகை விடுது தவளை?@
அச்சச்சோ படகு அக்கா, அது தவளயில்ல, ரயில்...புகைவிடுது :)

@ஆகா இப்ப அடம்பிடிக்கவும் ஆரம்பிச்சிடியா :))@
சந்தோஷ் அண்ணா, எனக்கு அப்பா வீட்லெயெ இருக்கணும் அதான்.

@12.30 மணிக்கு டி.வி பார்க்கலாமில்ல. @
ஆனா இன்னிக்கி அப்பா வந்தவுடன நா பறவை விடியோ பாப்பென். அப்பா ஓமெண்டு சொல்லிருக்காங்க.

@ஆஹா! சிபியாரையே கவுத்திட்டீங்களே, மழலை!
இது எதிர்க்கட்சி சதிதானே!! @

அச்சோ, சிபி அண்ணா வேல் அண்ணா என்னமொ சொல்லுறாங்க, எனக்கு விளங்கயில்ல!

@மணி பாக்குறதுக்கு கடிகாரமே இல்லைன்ன அப்பா வேலைக்கே போக வேண்டியதில்லை@
இல்லை நேசி அண்ணா, குருவி கத்தினாலெ அப்பா வேலைக்கிப் போயிடுவாங்கள்! :)

2:06 PM  
Blogger நாமக்கல் சிபி said...

வேல் அண்ணா!

குழந்தையைக் குழப்பாதீர்!

2:15 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

அப்பா வீட்டிலையே இருந்தா தவளை ரயில் எல்லாம் எங்கிருந்து வரும் தம்பி? :)

//குருவி கத்தினாலெ அப்பா வேலைக்கிப் //
குருவியை என்ன பண்ணலாம்னு நேசி அண்ணா சொல்வாரு :)

2:34 PM  
Blogger துளசி கோபால் said...

மழலை,

உங்க பதிவெல்லாம் சூப்பரா போய்க்கிட்டு இருக்கே! பேஷ் பேஷ். பிரமாதம்.

உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

9:05 PM  
Blogger மழலை said...

துளசி அக்கா, நன்றி!

9:11 PM  

Post a Comment

<< Home