மழலைச் சொல்

Thursday, July 27, 2006

அம்மாவொட டாக்டர்

அம்மா, அப்பா, நான் மூனு பேரும் டாக்டர் ஆபிசுக்குப் போனம். ஏன்னா இங்கெ பாருங்க தெரியும். அந்த டாக்டர் எனக்கு விருப்பம். முந்தி அங்க போனப்பொ என்னைப் படம் கீறச் சொல்லி, அவங்க சுவத்துல ஒட்டி வச்சாங்க. நேத்தும் நா ஒரு படம் கீறிக்கொண்டு போனென். அந்தப் படத்துல அம்மா, அப்பா, நா, பாப்பா, டாக்டர் எல்லாம் நிக்கிறம். டாக்டர்கிட்ட குடுத்தென். சிரிச்சுகிட்டே வாங்கி இதையும் சுவத்துல ஒட்டிட்டாங்க. அம்மா வயித்துல கொஞ்சம் ஜெல் போட்டுட்டு ஒரு மைக் வச்சாங்க. உள்ள பாப்பாவோட இதயம் ஹுஹ் ஹூஹ் அப்படின்னு வேகமா அடிக்கிறது கேட்டுச்சு. சின்ன ஆக்களுக்கு இதயம் வேகமா அடிக்கும், பெரியாக்களுக்கு மெதுவா அடிக்கும். கிளம்பும்போது டாக்டர் எனக்கு மூனு ஸ்டிக்கர் குடுத்தாங்க. அது நிமோவுல வருமே மீன், சுறா மீன் அந்தப் படமெல்லாம் இருக்க ஸ்டிக்கர். சட்டையில ஒட்டிக்குவென். அப்புறமா நான் ரயில் விளாட்டு விளாடனும்னு கேட்டென். அது சின்னப் பிள்ளைங்களோட டாக்டர் இருக்க இடத்துலதான் இருக்கு, இப்ப அங்க போமுடியாதுன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்திட்டாங்க.

20 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

அப்படியா விஷயம்! வாழ்த்துக்கள் மழலை!

1:03 PM  
Blogger மழலை said...

நன்றி சிபி அண்ணா!

1:07 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//நன்றி சிபி அண்ணா!//

சகா கொஞ்ச நாளிலேயே அண்ணன் ஆகிவிட்டாரா! சரி! எப்படி அழைத்தால்தான் என்ன?

1:12 PM  
Blogger மழலை said...

தமிழ்மணத்தில உங்கட படத்தப் பாத்தென். நீங்க என்னவிடக் கொஞ்சம் பெரியண்ணாவா கண்ணாடி போட்டுட்டு இருந்திங்களா, அண்ணா எண்டு அப்பாதான் சொல்லித்தந்தாங்க.

1:15 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

குட்டிப் பையா,
சிபி அண்ணன் இல்லை,
தாத்தா..
சொல்லு...

1:34 PM  
Blogger மழலை said...

@அண்ணன் இல்லை,
தாத்தா.. @
இல்ல. நா படத்தில கண்டென். அவர் அண்ணாதான்.
நீங்க உங்கட படகு படத்தை எடுத்துப்போட்டு உங்கட படத்தப் போட்டா உங்களை எப்படிக் கூப்பிடலாமெண்டு யோசிப்பென். அதுவரக்கும் நீங்க படகு மாமா. சரியே? :)

1:37 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

சிபியை அண்ணா எண்டு சொல்லுவையேல், என்னை அக்கா எண்டாவது சொல்லு

இப்பிடி ஒரேடியாய் மாமாவாக்க வேண்டாம் :)

1:41 PM  
Blogger மழலை said...

அச்சச்சோ படகு அக்கா, மன்னிச்சுக் கொள்ளுங்க. ஆமா பொன்னியெண்டால் நல்லா இருக்குமில்ல, என்ன அது பொன்ஸ்? தெரியாமக் கேக்குறென், கோவியாதியுங்கோ படகு அக்கா :)

1:45 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

கோபம் என்ன குழந்தை?!! :)

பொன்ஸ் என்பதற்கே என்னை அரிசி என்று கிண்டல் செய்றாங்க.. பொன்னி எண்டால்.. அவ்வளவு தான் :)

1:51 PM  
Blogger மழலை said...

//பொன்னி எண்டால்//
பொன்னி எண்டால் ஆறு எண்டு சொல்லுங்கொவென், அந்த ஆத்துலதான் எண்ட படகும் ஓடுதெண்டு சொல்லுங்கொவென் :)

1:58 PM  
Blogger நாமக்கல் சிபி said...

பொன்னியோ, பொன்ஸோ!

அக்காவெல்லாம் ஓவரா தெரியலையா மேடம்?

மழலைத் தம்பி! அவுகளை அத்தை எண்டு சொல்லவேண்டும்!

2:01 PM  
Blogger மழலை said...

சிபி அண்ணா, உங்களுக்கு அண்ணாவும், அவங்களுக்கு அக்காவும். சரியே? சண்டை போடக்குடாது என்ன? :)

2:06 PM  
Blogger நாமக்கல் சிபி said...

மழலைத் தம்பி சொல்லிவிட்டா பிறகு நோ அப்பீல்!

சண்டை இல்லை. சமாதானம்.
:)

2:08 PM  
Anonymous Anonymous said...

நல்லா சொல்லுங்க மழலை.. சின்னக் குழந்தைங்க மாதிரி சண்டை போட்டுகிட்டு!!!

2:09 PM  
Blogger மழலை said...

நல்ல சிபி அண்ணா:)

2:10 PM  
Blogger மழலை said...

//நல்லா சொல்லுங்க மழலை.. சின்னக் குழந்தைங்க மாதிரி சண்டை போட்டுகிட்டு!!! //
அச்சச்சோ, இந்த anonymousதான் மொதெல்ல உள்குத்து எண்டு என்னவோ சொல்லிட்டுப் போனவர். மறுபடியும் வந்திட்டார்.

2:13 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//சண்டை போட்டுகிட்டு!!! //
அச்சச்சோ, இந்த anonymousதான் மொதெல்ல உள்குத்து எண்டு என்னவோ சொல்லிட்டுப் போனவர். மறுபடியும் வந்திட்டார்.//

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற தைரியத்தில் இந்த அண்ணன் இப்போ எஸ்கேப்புங்கோவ்..!

2:25 PM  
Anonymous Anonymous said...

மழலை, நல்ல அறிவாளிப் பிள்ளையா இருக்கீயள்.. அதே அனானிமஸ் எண்டு எப்படிக் கண்டுபிடிச்சீயள்?

2:28 PM  
Blogger மழலை said...

//அதே அனானிமஸ் எண்டு எப்படிக் கண்டுபிடிச்சீயள்? //
அங்கயும் anonymous எண்டுதான எழுதியிருந்தார்? ஆனா ஒரெ பேரில நிறைய ஆக்களும் இருக்கினம் தானெ? அப்படியெண்டால் இவர் வேறெயோ? தெரியலை அண்ணா/அக்கா என்னை விட்டுப்போடுங்க :))

2:31 PM  
Blogger நாமக்கல் சிபி said...

//அண்ணா/அக்கா என்னை விட்டுப்போடுங்க //

விட்டுடுங்கப்பா! பாவம்!
:))

12:46 PM  

Post a Comment

<< Home