மழலைச் சொல்

Tuesday, February 27, 2007

பறவைக் கூடு

அப்பா வேலையில இருந்து வரும்போது நா வெளியில விளாடிக்கொண்டு இருந்தேன். அப்பாவொட கார் தெரிஞ்சதும், ஓடிப் போயி ஏறிக் கொண்டேன். நானும் அப்பாவுந்தான் காரைக் கொண்டு வந்து நிறுத்துவோம். கியரை D க்கு நகர்த்தினா கார் ஓடும். நிறுத்திட்டு P யில போடணும். அதையெல்லாம் நாந்தான் நகர்த்துவேன்.
காருக்குள்ள அப்பா கேட்டாங்க,
"என்ன விளாடுறீங்க, குட்டி?"

நா சொன்னேன், "ஒரு பறவைக் கூடு கட்டுறேன்."
"பறவைக் கூடா?"
"ஆமா! இந்தக் குச்சியை எல்லாம் எடுத்து இப்பிடி இப்பிடி வச்சு. அதோ இருக்கு!"
"ஓ!"
"கீழ கிடக்கிற குச்சியையெல்லாம் பொறுக்கி இந்தக் கொட்டு வண்டியில வச்சுக் கொண்டு வந்து கட்டுறேன்."
அப்புறம் கிட்ட போயி பாத்தோம்.
"இதுக்குள்ளதான் வந்து முட்டையெல்லாம் இடும்,"னு சொல்லிட்டு கூட்டுக்குள்ள கையை விட்டுக் காமிச்சேன்.

0 Comments:

Post a Comment

<< Home