மழலைச் சொல்

Monday, August 28, 2006

பொறந்த நாளக்கி

நாங்க கடைக்குப் போனோம். அம்மாவும் அப்பாவும் சாமான்கள் வாங்கிட்டு இருக்கும்போது நா பொம்மைகள் பக்கம் இருந்த பெரிய கொட்டு வண்டி, மோட்டார் சைக்கிள் எல்லாத்தையும் பாத்துக்கொண்டு இருந்தேன். எனக்கு வண்டி வாகன பொம்மைகள் ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ம்ம்ம்ப விருப்பம். சில வண்டிகள்ல சுவிட்ச்சைப் போட்டா ட்ர்ர் ட்ர்ர்ருன்னு கத்தும், லைட் அடிக்கும். சில பொம்மைகள் பாடும். பேசும். இன்னும் நிறைய பொம்மைகளை ஒவ்வொன்னா பாத்துக்கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தால அம்மாவும் அப்பாவும் போலாமான்னு கேட்டாங்க. "எனக்கு இது இது இது இது எல்லாத்தையும் பொறந்த நாளக்கி வாங்கித் தாங்க" ன்னு சொல்லிட்டு எல்லா பொம்மைகளையும் வச்சுட்டு கிளம்பிட்டேன். வரும்போது "I had fun" அப்படின்னு சொல்லிக்கிட்டு வந்தேன்.

1 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

:) நிச்சயம் வாங்கித் தருவாங்க!
ஆனா எல்லாத்தையும் கேக்கப்பிடாது!

கேட்டா "என்ன இது சின்னப் புள்ளைத்தனமா" என்று கேட்பார்கள்!

5:57 PM  

Post a Comment

<< Home