என்னோட நல்ல நண்பர்

அவர் சாய்ங்காலம் பள்ளிக்கூடத்திலேருந்து வந்ததும் எனக்கு போன் செய்வார். நாங்கள் போய் விளாடுவோம். கொட்டு வண்டி, பந்து, ஓடிப்புடிச்சு அதான் விளாடுவோம். இருட்டு வந்துடும். அப்புறம் அம்மா அப்பா கூட்டிட்டுப் போவாங்க. எனக்குக் கஷ்டமா இருக்கும். ஆனா இம்புட்டு நேரம் விளாண்டதுக்காக சந்தோஷப்படனும், நாளக்கி மறுபடியும் விளாடலாம்னு சொல்லுவாங்க. சரின்னு கேட்டுக்குவென். சில நேரம் மத்தியானத்தில "அம்மா, இதான் நாளைக்கா?"ன்னு கேப்பேன். அம்மா ஆமெண்டு சொன்னா, "இண்டக்கி என்னோட நல்ல நண்பரோட விளாடுவேன்"னு சொல்லுவேன். ஏன்னா எனக்கு விளாடுறது விருப்பம். என்னோட நல்ல நண்பரோட விளாடுறது விருப்பம். ஆனா அந்தப் படத்தில இருக்கது நாங்க இல்ல.
1 Comments:
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் விளளயாடலாம். எப்போதும் விளையாடக் கூடாது.
Post a Comment
<< Home