மழலைச் சொல்

Monday, October 23, 2006

எனக்குப் பிடிச்ச நிறங்கள்

காகிதத்துல நா ஒரு சித்திரம் கீறத் தொடங்கினேன். கொஞ்சம் வண்ணத்தைப் பூசிட்டு அப்படியே மேசை மேலயே விட்டுட்டேன். அப்புறம் அடுத்த நாள் கொஞ்சம் பூசினேன். அதற்கடுத்த நாளும் கொஞ்சம். இப்படி மூண்டு நாள் அந்தச் சித்திரத்தைக் கீறினேன். கீறி முடிச்சுட்டு அந்தக் காகிதத்தை எடுத்து அதில் என் வண்ணப் பெட்டியை வைத்துச் சுற்றினேன். அப்பா அதற்குள் ஓடி வந்து அந்தக் காகிதத்தைக் கசக்க வேண்டாமெண்டு சொல்லிட்டு,
"ஆமா இதுல என்ன கீறினீங்க?"ன்னு கேட்டாங்க.
"அதா, அது ஒன்னும் இல்ல, அதெல்லாம் எனக்குப் பிடிச்ச நிறங்கள்" அப்படின்னு சொன்னேன்.
அப்புறம் நீளமா இருந்தவொரு கோட்டைக் காட்டி, "இது என்ன?"ன்னு கேட்டாங்க, நா சொன்னேன், "அது சிவப்பு." அதைக் கேட்டுட்டு அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா எல்லாம் சிரிச்சாங்க.

1 Comments:

Blogger நாமக்கல் சிபி said...

என்ன ஜாலித்தம்பி ஸ்கூல் போகத் தொடங்கியாச்சா?

ரொம்ப நாளா ஆளைக் காணவில்லையே?

10:53 PM  

Post a Comment

<< Home