மழலைச் சொல்

Friday, February 10, 2006

வண்டி பாக்குறேன்


எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு ரோட் இருக்கு. அதுல போற வண்டியெல்லாம் பாப்பேன். ஆம்புலன்ஸ், தீவண்டி, போலீஸ் கார் எல்லாம் ஊஊஊன்னு சத்தம் போட்டுக்கிட்டு, லைட் அடிச்சுக்கிட்டே போவும். சில நேரம் வீட்டுப் பக்கம் வராம வேற ரோட்ல போயிரும். எங்கயோ தீப் புடிச்சுருச்சு, யாருக்கோ உடம்புக்கு முடியல, அதான் எல்லாம் போவுதுன்னு சொல்லுவேன். நா சன்னலுக்கு வர்றதுக்குள்ள அதெல்லாம் போயிருச்சுன்னா மிஸ் பண்ணிட்டனேன்னு அழுவேன். அப்புறம் அழமாட்டேன். அன்னக்கி ஒரு நாள் பெரியம்மா, பெரியப்பாவெல்லாம் வந்தப்ப சூடம் கொளுத்துனோம். அப்போ புகை வந்து அந்த பயர் அலார்ம்ல பட்ருச்சு. உடனே வீ வீன்னு பயர் அலார்ம் சத்தம் போட்டுச்சு. மூனு தீ வண்டி வந்துச்சு. ஒரு தீயணைப்பு மாமா வீட்டுக்கு வந்து புகை வருதான்னு கேட்டார். நான் சன்னல்ல இருந்து தீ வண்டியைப் பாத்துக்கிட்டே இருந்தேன்.

0 Comments:

Post a Comment

<< Home