மழலைச் சொல்

Thursday, February 09, 2006

தக்ஷா


நானும் அப்பாவும் பனிக்கரடி விளாட்டு விளாண்டோம். அப்பா பெரிய கரடி. நா குட்டிக் கரடி. சோபாவெல்லாம் கட்டிப் பனி. பனியை எம்பி எம்பி ரெண்டு கையாலயும் அடிச்சு உடைச்சோம். உள்ளே மீன் நண்பர்கள் இருந்தாங்க. ஹலோன்னு அப்பா அவங்ககிட்ட பேசினார். அவங்க எங்கயோ வேற கடல்லேருந்து வர்றாங்கன்னு அப்பா சொன்னார். நானும் ஒரு பனிக்கட்டிய ஒடச்சேன். பாத்தா ஒரு மீன் நண்பர் இருந்தார். நானும் ஹாய் சொன்னேன். என் காதுல கைய வச்சுக் குவிச்சு மீன் சொல்றதை உத்துக் கேட்டேன். அப்பாட்ட திரும்பி, "இந்தியாவுலேருந்து வர்றாங்களாம்,"னேன். அப்பா பேர் என்னவாம்னு கேட்டார். நா மீனக் கேட்டேன். மறுபடியும் காதுல கை வச்சு உத்துக் கேட்டுட்டுச் சொன்னேன், "தக்ஷா." நல்ல பேரு குட்டிக் கரடியேன்னார் அப்பா. எப்படி இந்தப் பேரைக் கண்டு புடிச்சேன்னு அப்பாவும் அம்மாவும் கேட்டுக்கிட்டாங்க. நா அடுத்த பனிக்கட்டிக்குத் தாவுறேன்.

படத்துல இருக்கது, முந்தி ஒரு நா, என் சட்டையில நானே கீறிக்கிட்ட மீன்.

0 Comments:

Post a Comment

<< Home