மழலைச் சொல்

Sunday, February 05, 2006

கருத்தறிதல்


என் அம்மா நல்லா சமையல் பண்ணுவாங்க. என் அம்மா சமையலுல எனக்கு ரொம்பப் புடிச்சது உருளக்கிழங்கு பொரியல், புடிக்காதது அதுல போடுற சீரகமும் வெங்காயமும். அண்டைக்கு அம்மாகிட்ட நான் கிழங்கு பொரியல் கொஞ்சமா உறைப்பு போட்டு கேட்டேன். உடனே அம்மா ஆர்வக் கோளாறுல எனக்கு வேண்டாதது எல்லாம் போட்டு பொரிச்சு வச்சிருந்தாங்க. நா வேணான்னு அட்டகாசம் பண்ண, அம்மா சொன்னாங்க "அதுதான் தெம்பு, எல்லாம் சாப்பிட்டு பழகத்தான் வேணும் குட்டி" எண்டு. அப்போ நா சொன்ன "இல்ல அம்மா சீரகம் போட்டு சாப்பிட்டா சோர்வு எண்டு". அம்மா புரியாம என்ன பாத்தாங்க. அப்போ நா சொன்ன "அம்மா அப்படியென்னா தெம்பு இல்ல" எண்டு. அம்மா சிரிச்சிட்டு கேட்டாங்க "எப்படிடா குட்டி உனக்கு இந்த வார்த்தையெல்லாம் தெரியுது ?"எண்டு. அப்போ நா சொன்ன "just like that."

0 Comments:

Post a Comment

<< Home