மழலைச் சொல்

Friday, February 03, 2006

குருவி சூரியனுக்குள்ள போச்சு

என் அப்பா பச்சை நிறத்தில் இப்படி இப்படிச் செய்தார். என்னிடம் இது என்ன என்று கேட்டார். நான் பாம்பு என்றேன். அப்புறம் இன்னும் கொஞ்சம் பச்சையை அடித்தார். மறுபடியும் இது என்ன என்றார். நான் புல் என்றேன். மறுபடியும் பச்சையடித்தார். என்ன என்றார். எனக்குத் தெரியாது என்றேன். நன்றாக யோசிக்கச் சொன்னார். நான் யோசித்தேனா இல்லையா என்று தெரியவில்லை. அப்புறம் கொஞ்சம் பழுப்பை எடுத்துக் கீழே அடித்தார். என் பக்கம் திருப்பி இப்போ என்ன என்றார். நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். இப்படி உய்ய்யரமாய் இருக்குமே அது என்ன என்றார். நான் மலை என்றேன். அப்பா வெரிகுட் என்றார். அப்புறம் அப்பா வானத்தில் ஒரு சூரியன் வரைந்தார். வேறு என்ன வானத்தில் இருக்கும் என்று கேட்டார். நான் குருவி என்றேன். குருவி வரையச் சொன்னார். என்னிடம் கருப்பு இருந்தது. பாருங்கள், நான் வரைந்த குருவி அது. அப்பா அருமை என்றார். குருவி எங்கே போகிறதென்று கேட்டார். அது சூரியனுக்குள்ள பறக்கப் போவுதுன்னு சொன்னேன். அப்புறம் சூரியனுக்குள்ள குருவி வரைஞ்சேன். அங்க பாருங்க இருக்கு, கருப்பா, அதான். சூரியனுக்குள்ள சூடா இருக்குமில்ல, அதுனால குருவி செத்துப் போச்சு. பாதி பாதியா கீழ விழுந்துருச்சு. எங்க வீட்டுக்கிட்ட கூட ஒரு பாதி குருவி கிடந்துச்சு. ஆனா இது வேற குருவி. ஒடம்புக்கு முடியாம செத்துப் போச்சுன்னு அம்மா சொன்னாங்க. ஓகே, பை.

0 Comments:

Post a Comment

<< Home