மழலைச் சொல்

Saturday, February 04, 2006

தேங்காய்க்கண்

நானும் அப்பாவும் படிச்சுக் கொண்டிருந்தோம். அம்மாவுக்கு உதவி செய்வோம்ன்னு எந்திரிச்சுப் போனோம். அம்மா தேங்காயை உடைக்கச் சொன்னார். நான் தேங்கா ஜூஸ், தேங்கா ஜூஸ்ன்னு குதிச்சேன். தேங்காத் தண்ணின்னு அப்பா சொன்னார். தேங்காயை எடுத்து வெளிய வச்சார். பாத்தா தேங்காய்க்குக் கண்ணு இருந்துச்சு. இங்க பாருங்க தேங்காய்க்குக் கண்ணு இருக்குன்னு சொன்னேன். அப்பாவும் அம்மாவும் சிரிச்சாங்க. நா அதோட வாயைக் கிள்ளிட்டேன். தேங்காயைப் படம் புடிச்சோம். பாத்தீங்களா கண்ணு, வாய் எல்லாம் இருக்கு.

அப்புறமா தேங்காயை உடைச்சுத் தண்ணியை வடிகட்டி எனக்குக் குடுத்தாங்க. நல்லா இனிச்சுச்சு. ஓகே, பை.

0 Comments:

Post a Comment

<< Home